பார்க்காத போது கூட
பார்த்துக் கொண்டே இருக்கிறாள்
என் காதலி
போட்டோவில் மட்டும்!!!
உனக்காய் எழுதிய
ஒற்றைக் கவிதையை
எவ்வளவு முயன்றும்
சொல்ல முடிவதில்லை
தேர்வு அறையில்
மறந்து போகும்
பதில் போல!!!
என் காதலை
வலுப்படுத்துவது
உனக்கான கவிதைகளும்
தோற்றுப் போன
நண்பர்களின்
காதலும் தான் !!!
நம் காதலின் வெற்றி
எங்கிருக்கிறது தெரியுமா?
காதலியை தோழியாகவும்
பார்த்த என்னிடமும்
காதலனை கணவனாய் மட்டுமே
பார்த்த உன்னிடமும் !!!
Subscribe to:
Post Comments (Atom)
PHOTO MATUMMA PARTHUTEY ERUKUREN UNNA..EPPOVUM DHAN UNNAKU DHAN DA PURUSSA TEHRIYURATHU ELLAAA!! :-/
ReplyDeleteenum neraya eluthalam ella..!!!
ReplyDeleteநல்லாயிருக்குங்க காதல் கவிதை...
ReplyDelete